மதுரை வீரன் - ஓர் அறிமுகம்
மதுரை வீரன் கதை
16 நூற்றாண்டில்,துளசிங்க
மகராஜன் என்ற ஒரு அரசருக்கும் கற்ப்பகவள்ளி என்ற அரசிக்கும் மகனாக பிறக்கின்றார்.
ஆனால் குழந்தை கழுத்தில் மாலையுடன் பிறக்கவே மன்னர் மந்திரிகளின் ஆலோசனைகளை நாட, குழந்தை வளர்ந்து பெரியவன் ஆனான் என்றால் நாட்டிற்க்கு
நல்லது இல்லை என்று ஜோதிடம் சொல்லிவிட அரசர் அந்த குழந்தையை கொள்ள மனமில்லாமல்
வெகுதூரம் இருக்கும் ஒருக்காட்டில் சென்று விட்டு விடும்படி கட்டளை இடுகிறார்.
குழந்தையை சுற்றி சிங்கம், புலி, கரடி, யானை
அனைத்தும் மண்டியிட்டு வணங்க நாகம் தலைக்கு மேல் குடைவிறித்திருந்தது.
அந்த நேரம் சின்னான் செல்லி என்ற தம்பதியினர் அவ்வழியே
செல்ல அக்காட்சியை கண்டு பிரமிப்படைந்தனர். சிறிது நேரத்தில் அந்த விலங்குகள்
அவ்விடத்தை விட்டு அகன்றதும் வெகுநாள் குழந்தை பாக்கியம் இல்லாத அவர்கள் அந்த
குழந்தையை எடுத்து வீரன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். மதுரை வீரன்
என்பவர் உண்மையாக வாழ்ந்த ஒரு மண்ணின் மைந்தர். இவர் அரசபரம்பரையை சேர்ந்தவராவார்.
ஒரு சிறந்த பெரிய போர் வீரனான அவர்
எப்போதும் தன் மக்களை போராடி பாதுகாத்து வந்துள்ளார்.
அந்த நேரத்தில்.மதுரை நாயக்கரால் ஆளப்பட்டு வந்த மதுரை
நகரம் மற்றும் மக்களை, ஒரு வெல்ல
முடியாத போரினில் மூலம் சங்கிலி கருப்பர் அச்சிறுத்தி வந்தார். இறுதியாக, மதுரை வீரன் அந்த போரில் கலந்து சங்கிலி கருப்பரை
தோற்கடித்து மதுரையை மீத்தார்.
சங்கிலி கருப்பரை தோற்கடித்தப்பின், மதுரை வீரன் திருமலை நாயக்கரின் கீழ் தளபதிகளில் ஒருவராக
மதுரை வீரன் பொறுப்பெடுத்தார். திருச்சி பகுதியை ஆட்சி செய்துக் கொண்டிருந்த
ராஜகம்பளம் இனத்தை சேர்ந்த பொம்மையா நாயக்கர் என்பவரின் மகள் பொம்மி வயதுக்கு
வருகிறாள். ராஜகம்பளம் சமுதாயத்தின் வழக்கப்படி வயதுக்கு வந்த அந்த பெண்ணை
காட்டில் குடில் அமைத்து ஒரு மாதம் அருந்ததியினர் காவல் செய்ய வேண்டும்.
காவல் பொறுப்பை ஏற்ற வீரன் பொம்மிக்கு காவல் செல்கிறார்.
வீரனின் உயரமான நிமிர்ந்த தோற்றத்தையும், விரிந்த மார்பையும், பெரிய கட்டான தோள்களையும், முரட்டு கைகளையும், உருதியான கால்களையும், துடுக்கான பேச்சும், கழுகின் பார்வையும், முரட்டு மீசையும், கலையான சிரிப்பையும் கண்ட பொம்மிக்கு யார் இந்த வீரன்? என்பதை தெரிந்துக்கொள்ள ஆர்வம் உண்டாயிற்று. இன்னும்
சொல்லப்போனால் புதிதாய் பூத்த செந்தாழம்பூவான பொம்மியை பெரிதாய் கவர்ந்ததே வீரனின்
நடைதான். அரசனிடம் நன்மதிப்பு பெற்ற காவலர்களில் ஒருவரான சின்னான் என்பவரின்
மகன்தான் இந்த வீரன் என்பதை பொம்மியின் தோழி ஒருத்தி சொல்லக்கேட்டு பொம்மி ஐயம்
தெளிந்தாள். பொம்மி ஜன்னலின் ஓரம் நின்று மெல்ல மெல்ல பேச்சு கொடுத்தாள். பின்
இருவரும் சரளமாக உரையாட ஆரம்பித்தனர்.
வீரன் காவலுக்கு வராத நாட்களில் பொம்மி வீரனின் வரவை
எதிர்ப்பார்த்து ஏமாற்றம் அடைவாள். சின்னான் காவலுக்கு வர இயலாத நாட்களில்தான்
வீரன் காவலுக்கு வருவார். அது ஒரு மழைக்காலம் என்பதால் சின்னானுக்கு
குளிர்காய்ச்சல் ஏற்ப்பட்டது. ஆகவே சிலநாள் காவலுக்கு வீரன்தான் சென்றார். ஒருநாள்
காவலின் போது பெருமழை தூரவே காவலில் இருந்து விலக முடியாமல் வீரன் அங்கேயே
நின்றார். பொம்மி தன் குடிலுக்குல் வரச்சொல்லி உத்தரவிட்டும் வீரர் காவலிலிருந்து
பின்வாங்கவில்லை. “யாரும்
இளவரசியார் குடிலுக்குள் செல்லாதப்படி காவலிருப்பதே எனக்குண்டான அரசக்கட்டளை. நானே
அதை மீறலாகுமா?"
என்றார்.
அத்தோடல்லாமல் தன் தந்தையின் மேல் மன்னர் வைத்திருக்கும்
நன்மதிப்பும் தந்தை தன் மேல் வைத்திருந்த நம்பிக்கையும் பாழாகும் என்பதையும் நன்கு
அறிந்திருந்தார். எனவே காவல் நேரம் முடியும் வரை அவர் அங்கிருந்து ஓரடிக்கூட அகல
வில்லை. இரவு முழுதும் மழையில் நனைந்ததால் மறுநாள் வீரன் காவலுக்கு செல்ல
இயலவில்லை.
தொடர்ந்து ஒருசில நாட்கள் வீரன் வராததைக் கண்டு வீரனைக் காண
ஆவல் கொண்ட இளவரசி நேரே வீரனின் குடிசைக்கு சென்றாள். மாறுவேடத்தில் மறுத்துவச்சியாக.
பொம்மியின் வருகையினால் சினனானும் செல்லியும் அச்சமுற்றனர். இளவரசியாரின்
தேற்றலால் அவர்கள் சாந்தமாகினர். பொம்மியின் அளவற்ற காதலால் வீரனின் மனமும்
தளர்ந்தது. இவரின் வீரம் மற்றும் அழகில் மயங்க இருவரும் ஊரை விட்டு
வெளியேறுகின்றனர்.
இது பொம்மையா நாயக்கருக்கு தெரிந்தவுடன் மிகுந்த கோவத்தில்
இருந்தார் மற்றும் இச்செய்தியை திருமலை நாயக்கர் மன்னரிடமும் தெரிவிக்கின்றார் .
அந்த சமையத்தில் மதுரை வீரர் ராஜாவின் அரண்மனையில் பணிபுரியும் ஒரு பணிப்பெண்ணை
காதலித்து வந்தார். இவரின் வீரத்தைக் கண்ட தொட்டிய நாயக்க இன பெண் வெள்ளையம்மாள்
மதுரை வீரனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அவன் அரசர் மகன் என்பதை
அறியாமல் அருந்ததியர் இனம் என்று எண்ணி, உயர்ந்த சாதியினை சேர்ந்த பெண்களை திருமணம் செய்து
கொண்டதற்காக சக்கிலியர் சமூகமும் திருமலை நாயக்கரும் மதுரை வீரருக்கு தண்டனை வழங்க
வேண்டும் என்று எண்ணினர்.
மதுரை வீரரை போன்ற ஒரு பெரிய வீரரை மோதுவது இயலாத காரியம்
என்று இருந்த போதும், மதுரை வீரரை உடல் அங்கங்கள் தனி தனியாக வெட்டி எறிய
உத்தரவித்தார். ராஜாவின் உத்தரவை மீற முடியாதலால், அந்த தண்டனை மதுரை வீரருக்கு வழங்கப்பட்டது.
மதுரை வீரரின் மரணத்துக்கு பிறகு, திருமலை நாயக்கர் காணவில்லை. சில நாட்களுக்கு பிறகு, அவரின் உடல் ஒரு கிணற்றில் காணப்பட்டது. அதிலே அவரின்
சகாப்தமும் முடிந்தது.
பின்னாளில் இங்குள்ள மக்களுக்கு குலதெய்வமாக ஆனார். மதுரை
வீரன் காட்டில் ஆதரவற்ற குழந்தையாக தான் கண்டெடுக்க பட்டார் என்பது வரலாற்று
பதிவுகளின் அடிப்படையிலும், மதுரை வீரன்
கதைப்பாடல்களின் அடிப்படையிலும் மற்றும் அருந்ததியர் இனத்து மக்கள் உட்பட அனைத்து
சமூக மக்களாலும் ஏற்கப்பட்டு, கூறப்படும்
செவிவழி செய்தியின் அடிப்படையிலும் உண்மையாக கருதப்படுகிறது.
No comments