திருவாவடுதுறை ஆதீனம் வரலாறு
திருவாவடுதுறை ஆதீனம் வரலாறு
திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் தென் இந்தியாவிலுள்ள
சைவ ஆதீனங்களில் ஒன்றாகும். இது நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டத்தில்
மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் திருவாலங்காட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோ
மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
திருக்கயிலாய பரம்பரை குருமரபில் தழைத்தோங்கி வருகின்ற
இவ்வாதீனம் சித்தர் சிவப்பிரகாசரிடம் ஞானோபதேசம் பெற்ற அருள்திரு நமசிவாய
மூர்த்திகள் அவர்களால் கிபி பதினான்காம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பெற்றது.
சித்தர் சிவப்பிரகாசர் அருள் நமச்சிவாயரிடம் தீட்சை பெற்றவர். அருள் நமச்சிவாயர், உமாபதி சிவாச்சாரியாரிடம் உபதேசம் பெற்றவர்.
கிளைகள்
திருநெல்வேலி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருநள்ளாறு, இராமேசுவரம், மதுரை, திருச்செந்தூர், மற்றும் காசி, காளஹஸ்தி
உட்பட 50 இடங்களில் இதன் கிளை மடங்கள் உள்ளன.

No comments