சனி பெயர்ச்சி பலன்கள் 2017-2020 - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்
(மகம், பூரம், உத்தரம் – 1ம் பாதம்
(மா – பி – மு – மே – மோ – மௌ – ட – டி – டே) போன்ற எழுத்துகளில் பெயரை முதல் எழுத்தாக கொண்டவர்கள்
ஆவணி மாதத்தில் பிறந்தவர்களுக்கு – இப்பலன்கள்
ஓரளவு பொருந்தி வரும்)
வான மண்டலத்தில் 5வது ராசியாக வலம் வரும் உங்கள் ராசி நாதன் ஆகிய சூரியபகவான்
நவக்கிரகங்களில் முதலாவது கிரகமாகும். உலக உற்பத்திக்கும், உயிர்கள் வாழ்வதற்கும் சீராக தன்னுடய கதிர்களை வாரி
வழங்கும் வல்லமை பெற்ற சூரியன் கிரகங்களில் நம்முடைய கண்களுக்கு தெரியும் முதல்
கிரகமும் ஆகும்,
மற்றும் எல்ல கிரகங்களுக்கு தலைமையாக உள்ள சூரிய பகவான்
ராசி நாதனாக பெற்ற சிம்ம ராசியில் மகம், பூரம் உத்திரம் என்ற 3 நட்சத்திரங்களை தன்னகத்தே கொண்டது.
நவக்கிரகங்களில் முதன்மையானது சூரியன் ஆகும். அதுபோல்
அரசாளும் யோகமும்,
எதிலும் முதன்மையாகவும் விளங்க விருப்பமுடையவர்கள். நீங்கள்
பொன்னையும் பொருளையும் பெரிதாக மதிக்கும் இவ்வுலகில் புகழுக்காக இவ்வுலகில்
எதையும் துணிந்து செயல்படுவீர்கள். நிர்வாகத் திறமை ஆட்சி அதிகாரம் மற்றும்
பேச்சாற்றலுக்கு உரியவரான நீங்கள் எதையும் விட்டு கொடுக்காத தன்மையும் உண்மைக்கும், நேர்மைக்கும் போராடி வெற்றி பெறுவீர்கள் இக் குணநலன்கள்
உடைய உங்களுக்கு சனிபகவான் தனுசு ராசியிலிருந்து சஞ்சாரம் செய்து அளிக்ககூடிய
பலன்களை பார்க்க இருக்கிறோம்.
உங்களது ராசிக்கு 5ம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வது இதுவரை தள்ளிப்போன
சுபகாரியங்கள் இனிதே நடைபெற கூடிய வாய்ப்பாகும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில்
கலந்து கொள்ள வாய்ப்பாகும். சனிபகவான் பாபக்கிரகம் என்பதால் உங்களது ராசியின் 5ம் இடமான புத்தி ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது புத்தியின்
தன்மைகேற்ப செயல்படுவீர்கள், சிலசமயம்
நல்ல அறிவும் ஆற்றலுடன் சிந்திக்கும் குண்முடைய நீங்கள் சில சமயங்களில் மறதியும், கவனச் சிதறலும் உடையவராக இருப்பீர்கள்.
உடல் ஆரோக்யம் சீராகி மகிழ்ச்சியாக இருக்கும் காலம்.
தீர்க்க முடியாத பிணி மற்றும் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வுடன் செயல்படுவீர்கள்.
பணப் புழக்கம் தாரளமாக இருந்து வரும் பேச்சில் சாமர்த்தியம் நன்மை உண்டாக்கும்.
குடும்பத்தில் புது வரவுகள் வந்து சேரும். புதிய விஷயங்களை ஆர்வமுடன் கற்பீர்கள்.
நம்பிக்கையுடன் முயற்சிக்க எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். எதையும் தீர ஆராய்ந்து
முழு மூச்சுடன் செயல்பட வெற்றி கிட்டும். தாயாரின் உடல் நிலையில் ஆரோக்யம்
காணப்படும்.
வண்டி வாகனங்கள் வீடு, நிலம், வாங்க
வாய்ப்புகள் அமையும். தந்தை மற்றும் தாய் வழி சொத்துக்கள் எதிர்பாராமல் வர
வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை மட்டும் தாராக மந்திரமாக எண்ணி
செயல்களில் வெற்றி பெற முடியும். பெரிய மனிதர்கள் சகவாசம். அதிகாரிகளின் சலுகை
இவையெல்லாம் கிட்டும். குழந்தைகளால் பிரச்சனை ஏற்பட்டு நிம்மதியற்ற சூழல்
ஏற்படும். அதே சமயம் நன்மையும் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களது உழைப்பு
மற்றவர்களுக்கு லாபகரமாக அமையும். உங்கள் பணம் பொருள் கண் முன்னே களவு போனது போல்
காணாமல் போகும் அல்லது பறிபோகவோ திருடு போகவோ வாய்ப்பிருக்கிறது. விருந்து
கேளிக்கைகளில் நாட்டம் குறையும். குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு விலகும். பூஜை, புனஸ்காரங்கள், கோவில், குளம், பக்தி
பிரார்த்தனைகள் இவற்றில் அதிக ஈடுபாடு ஏற்படக் கூடிய காலமாக உள்ளது.
காதல் விஷயங்கள் உற்சாகமாக இருந்து வரும். காதல் கை கூடி
திருமணத்தில் ஒரு சிலருக்கு முடியும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பது சற்று
காலதாமதமாகும். விரும்பிய வேலை கிடைப்பதில் நிறையத் தடைகள் ஏற்படும். வழக்குகள்
ஜெயிப்பது போல் தோன்றினாலும் எதிரி வலுவாக இருக்க வாய்ப்புண்டு போட்டித்
தேர்வுகளில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டி இருக்கும். அதிக உழைப்பு குறைந்த
வருவாய் என்ற சூழ்நிலையிலே உங்களை இயங்க வைப்பார். பங்கு சந்தையில் தேவையற்ற
முதலீடு கூடாது. விட்டதை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர்த்தல் நலம்.
ரேஸ், லாட்டரி, கிளப், சூதாட்டம்
இவைகளில் அதிகக் கவனம் தேவை. இவற்றிலிருந்து சற்று விலகியே இருப்பது நல்லது ஆகும்.
உயரதிகாரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. வேலையாட்களால் தேவையற்ற
பிரச்சனைகளும் மன வருத்தங்களும் ஏற்படும். விரதம் போன்ற விஷயங்களைக் கைவிட்டு உணவு
விஷயத்தில் அதிக கவனம் தேவை. சக ஊழியர்களின் எதிர்பாராத உதவியும் அவர்களின்
ஒத்துழைப்பும் நமக்கு சாதகமாக இருந்து வரும். நண்பர்களால் தேவையற்ற வருத்தங்கள்
ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு வலுவான போராட்டத்திற்கு பிறகே குழந்தை
பாக்யம் அமையும். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிபோடவோ ஒத்தி போடவோ கூடாது.
காரியத்திலே கண்ணாய் இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் போட்டியான உலகத்தில்
ஜெயிக்க முடியும்.
பரிகாரம் : சனிக்கிழமையில் நீல நிறம் கலந்த வஸ்திரத்தை தானம்
செய்யுங்கள். வியாழக்கிழமையில் விநாயகருக்கு அருகம்புல் வைத்து வணங்குங்கள்.
உங்கள் நட்சத்திரம் வரும் நாட்களில் தயிர் சாதத்தை 9 பேருக்கு தானம் செய்யுங்கள். சனி பகவானையும்
சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்,
உத்தரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2
(டோ, ப, பா, பி, பூ, வி, ள, ட, பே, போ என்ற
எழுத்துகளில் பெயரை முதல் எழுத்தாக கொண்டவர்களும் புரட்டாசி மாதத்தில்
பிறந்தவர்களுக்கும் இப்பலன்கள் ஓரளவு பொருந்தி வரும்
வான மண்டலத்தில் 6வது ராசியாக வலம் வரும் கன்னி ராசியின் அதிபதியான புதன்
உங்கள் ராசிநாதன் ஆவார். கல்விக்கும் வித்தைக்கும் ஞானத்துக்கும் அறிவிக்கும்
ஆற்றலுக்குமான புதபகவான் வீட்டில் பிறந்த நீங்கள் எதையும் நின்று நிதானித்து
செயல்படும் ஆற்றல் உடையவர்கள். எந்த காரியத்தையும் பல முறை யோசித்து செயல்படும்
நீங்கள் விரைவாகவும் வேகமாகவும் செயல்படுவீர்கள். மாற்றம் என்ற சொல்லுக்கு நீங்களே
எடுத்துக் காட்டாகும். எண்ணிய எதையும் செய்யும் ஆற்றலும் துணிச்சலும் உடைய நீங்கள்
சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
அறிவிக்கும் சேமிப்புக்கும் சிக்கனத்திற்கும் உரியவரான
நீங்கள் தேவையற்ற செலவினங்களை குறைத்து தேவைக்கு மட்டும் செலவு செய்யும் இயல்பு
உடையவர்கள் மாற்றம் என்ற கருத்தை உடனே ஏற்றுக் கொள்ளும் தன்மையுடைய உங்களுக்கு
இந்த சனிபகவான் இதுவரை உங்களுடைய ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சரித்தவர் இனி 4ம் இடத்தில் தனசு ராசியில் சஞ்சாரம் செய்வார். இது
அர்த்தாஷ்டமச் சனி எனப்படும். இதை நினைத்து பயப்படவோ அல்லது கவலைப்படவோ வேண்டாம்.
அவரவர் பிறப்பு ஜாதகத்தை பொறுத்து இதன் தன்மை மறுபடும். எனவே அர்த்தாஷ்டமச் சனி
நடக்கப் போகிறதே என்று ஒரு போதும் கவலையோ பயமோ கொள்ள வேண்டாம்.
உங்கள் ராசிக்கு 5ம் வீட்டிற்கும் 6ம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் 4ம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் இதுவரை வேலை இல்லாமல்
இருந்தவர்களுக்கு வேலைக்கான வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். எதிர்பார்த்த வேலை
கிடைப்பதில் தாமதம் இருந்தாலும் முதலில் கிடைத்த வேலையை ஏற்று கொண்டு திருப்தியற்ற
வேலையாக இருந்தாலும் திருப்தியாக செயலாற்ற வேண்டும். மேலும் 4ம் வீட்டில் சனி சஞ்சாரம் என்பது தொழிலில் தகராறு மற்றும்
தொழிலில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவார். அதே சமயம் வேலையில் அதிக கவனம்
செலுத்துதல் வேண்டும். வேலையில் அடிக்கடி விடுப்பு எடுப்பதைத் தவிர்த்தல்
வேண்டும். மேலும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டிற்கும், 6ம் வீட்டிற்கும் அதிபதியாக வருவதால் வேலையில் கவனம் தேவை. 5ம் இடம் என்பது பார்க்கும் வேலையை விட்டு வெளியே வருவது
அல்லது வெளியேற்றபடுவது என்பதைக் குறிக்கும். எனவே அவசரபட்டு வேலயை விடுவதோ அல்லது
வேறு வேலைக்கு மாறும் பொழுது வேலை உத்தரவாதம் இருந்தால் மட்டுமே மாற வேண்டும்.
சமூகத்தில் இதுவரை இருந்த வந்த நிலை மாறி சற்று மதிப்பும்
மரியாதையும் கூடும். இதுவரை இருந்து வந்த தேவையற்ற அலைச்சல்கள் குறைந்து ஒரு
இடத்தில் நிலையாக இருக்க வாய்ப்பு அமையும். வேலையின் காரணமாக உயர்வு ஏற்படும். அதே
சமயம் அதிக உழைப்பு குறைந்த வருவாய் என்ற சூழ்நிலையை சனி பகவான் உருவாக்குவார்.
எனவே உழைப்புக்கு அஞ்சாமல் வேலையில் சளைப்பில்லாமல் விரும்பி செய்தல் வேண்டும்.
அப்பொழுது தான் வேலையில் நீங்கள் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்க முடியும்.
இல்லையெனில் வேலையில் அலுப்பும் சலிப்பும் தோன்றி வேலையை விட வேண்டியது வரும்.
உங்களது லக்னத்தின் 2ம் வீட்டிற்கு அதிபதி சுக்ரன் ஆவார். அதனால் இதுவரை இருந்த
வந்த பொருளாதார தேக்க நிலை மாறி பணவரவும் பொருள் வரவும் அதிகரிக்கும். இதுவரை கையை
விட்டுப்போன பொருட்கள் நகைகள் பத்திரங்கள் திரும்ப வீடு வந்து சேரும். பேச்சில்
சாமர்த்தியமும் அதிகரித்து காணப்படும். பொருளாதார நிலை மேம்படும். சுறுசுறுப்பும்
ஊக்கமும் உற்சாகமும் அதிகரிக்கும். இதுவரை இருந்து வந்த மந்தம் தயக்கம், குழப்பம், தேக்கம், தடுமாற்றம் மாறி பொறுப்புணர்வுடன் செயல்பட ஆரம்பிப்பீர்கள்.
புதிய முயற்சிகளில் ஈடுபடும் பொழுது சற்று கவனம் தேவை.
தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. சகோதர சகோதரர்களில் அன்பும் ஆதரவும்
இருந்தாலும் அவர்களால் நிம்மதியற்ற சூழ்நிலை நிலவும் நெருங்கிய உறவினர்களை விட்டுப்
பிரிய நேரிடும். எதிர்பார்த்த செய்திகள் தகவல்கள் சற்று தாமதித்து சாதகமாக வந்து
சேரும். இடம் வாங்குவதற்கு வீடு வாங்குவதற்கு வண்டி வாகனம் வாங்குவதற்கு
வாய்ப்புகள் தானாக வந்து சேரும். தாயாரின் உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை.
குறிப்பாக உங்களது உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இனம் தெரியாத நோய்கள் வந்து
போகும் குறிப்பாக சளித் தொல்லையால் அவதிப்பட நேரிடும்.
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் அதிகக் கவனம் தேவை.
அதில் மகிழ்ச்சியற்ற செயல்கள் நடந்தேறும். குழந்தைகளால் நிம்மதியற்ற சூழ்நிலை
உருவாகும். குடும்பத்தில் சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் சற்று தாமதத்திற்குப் பின் இனிதே
நடந்தேறும். நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். வழக்குகள் சாதகமாக இராது.
தாய்மாமன்களின் அன்பும் ஆதரவும் இருந்து வரும். கேட்ட இடத்தில் கடன்கள்
கிடைக்கும். கடன்கள் அதிகரித்து கொண்டே போகும்.
கணவன் மனைவி உறவு சற்று சுமாராக இருந்து வரும். வலுவான
போராட்டத்திற்கு பின் காதல் நிறைவேறும் காதலால் தேவையற்ற மன வருத்தங்களும்
வேதனைகளும் வந்து சேரும். தொழில் முதலீட்டில் அதிக கவனம் தேவை. தேவையற்ற முதலீடு
கூடாது. தொழிலில் கூட்டாளிகளுக்கு ஆக உழைக்க வேண்டி வரும். தந்தையாரின் அன்பும்
ஆதரவும் கிட்டும். நண்பர்களால் எதிர்பாராத உதவிகளும் நன்மைகளும் வந்து சேரும்.
உயரதிகாரிகளின் அன்பும் ஒத்துழைப்பும் இருந்து வரும். கடை, தொழில் நிலம் தோட்டம், பண்னை, பயிர்
செய்யும் நிலம் வாங்கவும் கடை, அலுவலக
கட்டிடம் கட்டவும் ஒரு சிலருக்கு வாய்ப்புகள் உருவாகும். எதையும் தள்ளிப் போடுவது
ஒத்திப் போடுவது கூடாது. அன்றைய வேலைகளை அன்றே செய்து முடிக்க வேண்டும்.
பரிகாரம் : சனிக்கிழமையில் எள் சாதத்தை காக்கைக்கு வைத்து வாருங்கள்.
சனிக்கிழமையில் நீல நிறத்திலோ அல்லது கருப்பு நீலத்திலோ ஆடை அணியுங்கள்.
பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி
வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்.
சித்திரை 3, 4, ம் பாதங்கள், சுவாதி, விசாகம்
(ர, ரா, ரி, ரு, ரே, ரோ, த, தா, நி, து, தே) போன்ற எழுத்துக்களில் பெயரை முதல் எழுத்தாக
கொண்டவர்களும் ஐப்பசி மாதத்தில் பிறன்ந்தவர்களுக்கு இப்பலன் பொருந்தும்)
வான மண்டலத்தில் 7வது ராசியாக வலம் வரும் உங்கள் ராசிநாதனான சுக்ரன் – நவக்கிரகங்களில் சுபக்கிரகமாகவும் உலகில் உள்ள அனைத்து
இன்பங்களையும் அனுபவிக்கும் வாய்ப்பும், சந்தர்ப்பத்தையும் வழங்கவல்லவராக இருக்கிறார். கலை என்ற
வார்த்தைக்கு சுக்ரன் என்று அர்த்தம் உள்ள சுக்ரன் வீட்டில் பிறந்த நீங்கள் நல்ல
வசீகர தோற்றமும் நல்ல வார்த்தைகளைப் பேசுபவராகவும் விளங்குவீர்கள். உங்களுடன்
தொடர்பு கொள்ள பலர் விரும்புவர். யாருக்கும் தீங்கு நினைக்காத உங்களுக்கு எல்லா
வய்ப்புகளும் தேடி வருவதையே விரும்புவீர்கள். கடமை உணர்வோடு செயல்படுவதிலும்
மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் வல்லவர் நீங்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு 2ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்த சனிபகவான்
செல்லென்னா துயர்,
வேதனைகளையும், விரயங்கள்
மற்றும் பிரச்சனைகளை கொடுத்து வந்தார். அவர் இப்பொழுது உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது சிறப்பு ஆகும். இதுவரை பட்ட
கஷ்டத்திற்கு ஒரு விடிவு காலமாகும். இக்காலங்களில் உங்கள் மனதில் இனம்புரியா
உற்சாகம் இருந்து கொண்டே இருக்கும். இதுவரை நடவாமல் தள்ளிபோன சுபகாரியங்கள்
நடைபெறும் காலமிது. எடுக்கும் முயற்சியில் வெற்றியும், புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் கூடும். தனவரவு பொருள்
வரவுடன் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். அதிக
நேரத்தில் அலைச்சல்களும் ஏற்பட கூடிய காலம். பிரயாணங்களில் நன்மை உண்டு. உடன்
பிறந்தவர்கள்,
உறவினர்களால் நன்மை உண்டாகும்.
புது உறவுகளால் நன்மை ஏற்பட கூடிய நேரம். அதிகப்படியான
உணர்ச்சிவசப்படுவதை தவிர்ப்பது நல்லது. வேலையில் இடமாற்றம் ஊர் மாற்றம் மற்றும்
பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கி அதன் மூலம் வருமானம் வரக்கூடிய
காலம். உங்களைப் பற்றிய வதந்திகள் இருந்து கொண்டே இருக்கும். எதிலும் கவனம் தேவை.
கல்வியில் கவனம் தேவை. சொத்துக்களை வாங்கி விற்க நேரிடும்.
காதல் விஷயங்கள் சந்தோஷமாக இருக்கும். குழந்தை
இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். இனி சுபகாரியங்கள் நடக்கும் காலம்.
அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு அமையும். குழந்தைகளால்
எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். அவர்கள் படிப்பு, வேலை, வெளிநாடு
இவைகள் சாதகமாக இருந்து வரும். பங்கு சந்தை மற்றும் ரேஸ், லாட்டரி, கிளப், விருந்து, உல்லாசம்
நல்ல லாபகரமாகவும். பொருட்களை அடகு வைக்கும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு அமையும்.
வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை, வேலையில் உற்சாகம், சுறுசுறுப்பு மற்றும் வேலையில் முன்னேற்றம் ஊதிய உயர்வும்
ஏற்படும்,
உங்களது ராசிக்கு இன் 4ம் மற்றும் 5ம்
இடத்திற்கு சனிபகவான் அதிபதியாக இருப்பதால் தாங்கள் பார்க்கும் வேலையில் மிக
கவனத்துடன் இருக்கவும். உயர் அதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்ளல் வேண்டும். வரும்
பணத்தை முறையாக சேமித்தல் நலம். எதையும் நன்கு ஆராய்ந்து பின் கடன் கொடுக்கவோ, வாங்கவோ ஜாமீன் கையெழுத்துப் போடவேண்டிய சமயம். கடன்
வாங்குவதை தவிர்க்கவும். மனதில் இனம் புரியாத பயம், குழப்பம் தோன்றும் காலம் எனவே சிந்தித்து செயலாற்றவும்.
வீட்டு வளர்ப்பு பிராணிகளால் நன்மை ஏற்படும். வேலையாட்களால் தேவையற்ற மனச் சஞ்சலம்
ஏற்படும். தாய் மாமன்கள் ஆதரவு கிட்டும். தாயாரின் உடல் நலத்தில் அதிகக் கவனம்
தேவை. தந்தையாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் காலம் வெளிநாட்டு தொடர்பு சாதகமாக
இராது. ஆன்மீக பயணங்கள் தொடரும் நண்பர்கள் பிரிந்து இணையும் காலம். கணவன் மனைவி
உறவு சுமூகமாக சந்தோஷமாக இருக்கும்.
பரிகாரம் : ஆனைமுகனை வணங்கி, உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் சூரத்தேங்காயை உடையுங்கள்.
விநாயகப்பெருமானுக்கு வஸ்திரம் அணிவித்து வணங்குங்கள். சனிபகவானையும்
சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்,
(விசாகம் 4ம் பாதம், அனுஷம் கேட்டை)
(தோ, ந, நா, நி, நீ, நு, நூ, நே, நோ, ய, யா, யு) போன்ற
எழுத்துக்களில் பெயரை முதலாகக் கொண்டவர்களுக்கும் கார்த்திகை மாதத்தில்
பிறந்தவர்களுக்கும் இப்பலன்கள் ஓரளவு பொருந்தி வரும்)
வான மண்டலத்தில் 8வது ராசியாக வலம் வரும் உங்கள் ராசிநாதனான செவ்வாய் பகவான்
நவக்கிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுவார். இவரை ராசி நாதனாகக்
கொண்ட நீங்கள் உடல்பலமும், உள்ள பலமும்
கொண்டவராக திகழ்வீர்கள். தனக்கு மேல் ஒரு சக்தி இயங்குகிறது என்பதில்
நம்பிக்கையுடனும் மற்றவர்களிடம் இருந்து தனித்தும், சுயமாக சிந்திக்கும் ஆற்றல் உடையவராகவும், எதையும் தலைமை ஏற்று நடத்தும் திறம் கொண்டவர்களாகவும், மற்றவர்களை வசியப்படுத்தி தங்கள் வழிக்கு கொண்டு வருவதில்
வல்லவர்களாகத் திகழ்வீர்கள்.
இத்தகைய வல்லமை உடைய உங்களது ராசியில் இதுவரை ஜென்மச்
சனியாக சனிபகவான் சஞ்சரித்து வந்தார். இதுகானும் தேவையற்ற செலவினங்களையும்
எதிர்பார்த்த உழைப்புகேற்ற பலனும் இல்லாமல் எக்காரியத்திலும் தடையும் தள்ளிபோடும்
நிலையும் உருவாகி இருந்த நிலை மாறி – சனி பகவான்
சற்று உங்கள் ராசி மாறி உங்களுடைய 2ம் இடமான தன
ஸ்தானம் மற்றும் குடும்ப வாக்கு ஸ்தானம் வருவது சற்று பரவாயில்லை என்று தான் சொல்ல
வேண்டும்.
எந்த வேலையும் முடிக்காமல் தள்ளி போட்ட நிலை மாறும் இதுவரை
உங்கள் ராசு ஜென்மராசியாக இருந்தவர் மாறி 2ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுடைய கௌரவம், அந்தஸ்து, புகழ், ஓரளவு காப்பாற்றப்படும். இதுவரை தள்ளிப் போன சுபகாரியங்கள்
இனிதே நடந்தேறும். இதுவரை தேகத்தில் இருந்த மந்த நிலை மாறி சுறுசுறுப்பும் வேகம்
விவேகம் ஆரம்பமாகும். சமூகத்தில் சற்று பிரபலமாக வலம்வர வாய்ப்பும் சந்தர்ப்பமும்
அமையும். இதுவரை இருந்த வந்த கவலை, வேதனை, அசிங்கம் அச்சம், அவமானம் கஷ்டம் இவற்றிலிருந்து விடுபட்டு புதுவிதமான
வாழ்க்கையை எதிர்நோக்கி உங்கள் பயணம் ஆரம்பிக்கும்.
உங்கள் ராசிக்கு 3ம் வீட்டிற்கும் 4ம் வீட்டிற்கு அதிபதியான சனி பகவான் 2ம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பசனி – குடும்பத்திற்கு ஆகாது. என்றே கூறுவர். அதை பற்றிய கவலைகளை
தூக்கி எறிந்து விடவும். சனிபகவான் 3ம்
வீட்டிற்கும் 4ம் வீட்டிற்கு அதிபதியாகி அவர் 2ம் இடத்தில் சஞ்சரிப்பதால் சகோதர சகோதரிகளால் எதிர்பாராத பண
வரவும்,
பொருள் வரவும் கிட்டும். உறவினர்களால் பொருள் வரவு அல்லது
சகாயம் ஏற்படும். புதிய விஷயங்களைக் கற்க ஆர்வம் ஏற்படும். அடிக்கடி பயணங்கள்
செய்ய வேண்டியது வரும். அந்தப் பயணங்களால் எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும். இதுவரை
இருந்து வந்த சோம்பல் நிலை மாறி சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட
ஆரம்பிப்பீர்கள்.
உங்களை பற்றிய வீண் வதந்திகள் உலவிக் கொண்டிருக்கும்.
உங்களை பற்றிய விமர்சனங்களையும் தூக்கு எறிந்து எண்ணிய செயலில் கவனம் செலுத்துங்கள்.
எதிர்பார்த்த வெற்றி நிச்சயம். இதுவரை வராமல் நிலுவையில் இருந்து வந்த பணம், பொருள், நகை, பத்திரங்கள் தாமகவே வந்து சேரும். விடு மாற்றம், இடமாற்றம், ஊர் மாற்றம்
ஒரு சிலருக்கு அடிக்கடி அமையும். காலிமனை, கட்டிய வீடு, வண்டி
வாகனங்களால் மற்றும் நிறைய வீட்டு உபயோக பொருட்கள் தாமகவே வீடு வந்து சேரும்.
தாயாரின் அன்பும் ஆதரவும் அவர்களால் நன்மையும் ஏற்படும். அதே சமயம் தாயாரின் உடல்
நலத்தில் அதிக அக்கறை தேவை.
பேச்சில் அதிக கவனம் தேவை. தேவையற்ற விஷயங்கள் பேசுவதோ
எழுதவோ கூடாது. மற்றவர்கள் விஷயங்களில் அநாவசியமாக தலையிடுதல் கூடாது. கூடியவரை
அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்து வருதல் வேண்டும். பணவரவு பொருள் வரவு தாரளமாக
இருந்து வரும். தேவையற்ற செலவினங்களும் வரும். கூடிய வரை சுபச் செலவுகள் செய்துவர
நன்மை ஏற்படும். யாருக்கும் தேவையில்லாமல் கடன் கொடுக்கவோ வாங்கவோ கூடாது. கொடுத்த
பணம் வருவதில் சற்று தடை ஏற்பட்டாலும் கண்டிப்பாக தவணை முறையில் வந்து சேரும்.
காதல் விஷயங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் திருமணம் என்று
வரும்பொழுது சற்று போராட்டமே ஆகும். கூட்டு குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள்
ஏற்பட்டு விலகும். குடும்பத்தில் வரும் புது வரவால் நன்மையும் தீமையும் கலந்தே
காணப்படும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். அரசாங்க கடன் விஷயத்தில் அதிக கவனம்
தேவை. வழக்குகள் சாதகமாக இருந்து வரும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட
வாய்ப்பு அதிகம். தேவையற்ற விஷயங்களை இருவரும் பேசுதல் கூடாது. தேவையில்லாமல்
மூன்றாவது மனிதரை குடும்ப விஷயத்தில் இழுக்க கூடாது. வேலையில் அதிக முன்னேற்றம்
அமையும். சுய தொழில்களால் நன்மை ஏற்படும். பங்கு சந்தைகள் ஓரளவு சாதகமான பலன்
தரும். நண்பர்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். வெளியூர், வெளிநாடு செல்வதில் சற்று தடைகள் ஏற்பட்டு பின்
நிவர்த்தியாகும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் அதிகரித்து காணப்படும்.
No comments